சனி, 24 நவம்பர், 2018

வெள்ளைச் சங்கு.(வரிசை எண்.148.).


  • வெள்ளைச் சங்கினால் உதிரபித்தம் ,
  • விழிரோகம் ,
  • வாததோஷம் ,
  • இசிவு ,
  • முளைக்கட்டி இவைகள் நீங்கும்.
  • தீபனம் உண்டாகும்.

வெள்ளாடு வெண்ணெய்.(வரிசை எண்.147.).



  • வெள்ளாடு வெண்ணெயால் சுரரோகம் ,
  • பித்தநோய் ,
  • கரப்பான் ,ஆகியன நீங்கும்.,
  • பசியை உண்டாக்கும்.

வெள்ளாடு மோர்.(வரிசை எண்.146.).



  • வெள்ளாடு மோரை உபயோகப்படுத்த நீர்க்கட்டை உடைத்துவிடும் ,
  • பிரமேகத்தை நீக்கி நல்ல தேஜஸை உண்டாக்கும்.

வெள்ளாடுப் பால்.(வரிசை எண்.145.).



  • வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
  • சுவாசரோகம் ,
  • சீதங்கலந்த பேதி ,
  • கபதோஷம் ,
  • விரணம் ,
  • வாதத்தா லுண்டாகிய  வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
  • நல்ல பசி உண்டாகும் .

வெள்ளாடு நெய்.(வரிசை எண்.144.).



  • வெள்ளாடு நெய்யை யுண்ணில் அதிக சிலேத்துமாதிக்கத்தையும்,
  • வாதகோபத்தையும் போக்கும்,
  • சரீரத்தை வளர்க்கும் .,
  • கண்ணுக்கு ஒளியை உண்டாக்கும்.
  • பத்தியத்திற்கு ஆகும்.

வெள்ளாடு தயிர்.(வரிசை எண்.143.).



  • வெள்ளாடு தயிரை உண்பவர்க்கு அதிக நன்மைகளை தரும்.
  • இதன் ஆடையானது எளிதில் ஜீரணிக்காமல் மந்தத்தை உண்டாக்கும்.,
  • ஆனாலும் வெப்பகாலத்தில் உண்ண நன்மையைத் தரும்.

வெள்ளாடு மூத்திரம்.(வரிசை எண்.142.).



  • வெள்ளாடு மூத்திரம் வீக்கம் ,
  • பாண்டு ,
  • பற்பல வீக்கத்தின் எரிச்சல் ,
  • ரத்த கபம்,
  • துர்மாமிசம்,
  • மகோதரம் இவைகள் நீங்கும்.