சனி, 24 நவம்பர், 2018

வெள்ளைச் சங்கு.(வரிசை எண்.148.).


  • வெள்ளைச் சங்கினால் உதிரபித்தம் ,
  • விழிரோகம் ,
  • வாததோஷம் ,
  • இசிவு ,
  • முளைக்கட்டி இவைகள் நீங்கும்.
  • தீபனம் உண்டாகும்.

வெள்ளாடு வெண்ணெய்.(வரிசை எண்.147.).



  • வெள்ளாடு வெண்ணெயால் சுரரோகம் ,
  • பித்தநோய் ,
  • கரப்பான் ,ஆகியன நீங்கும்.,
  • பசியை உண்டாக்கும்.

வெள்ளாடு மோர்.(வரிசை எண்.146.).



  • வெள்ளாடு மோரை உபயோகப்படுத்த நீர்க்கட்டை உடைத்துவிடும் ,
  • பிரமேகத்தை நீக்கி நல்ல தேஜஸை உண்டாக்கும்.

வெள்ளாடுப் பால்.(வரிசை எண்.145.).



  • வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
  • சுவாசரோகம் ,
  • சீதங்கலந்த பேதி ,
  • கபதோஷம் ,
  • விரணம் ,
  • வாதத்தா லுண்டாகிய  வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
  • நல்ல பசி உண்டாகும் .

வெள்ளாடு நெய்.(வரிசை எண்.144.).



  • வெள்ளாடு நெய்யை யுண்ணில் அதிக சிலேத்துமாதிக்கத்தையும்,
  • வாதகோபத்தையும் போக்கும்,
  • சரீரத்தை வளர்க்கும் .,
  • கண்ணுக்கு ஒளியை உண்டாக்கும்.
  • பத்தியத்திற்கு ஆகும்.

வெள்ளாடு தயிர்.(வரிசை எண்.143.).



  • வெள்ளாடு தயிரை உண்பவர்க்கு அதிக நன்மைகளை தரும்.
  • இதன் ஆடையானது எளிதில் ஜீரணிக்காமல் மந்தத்தை உண்டாக்கும்.,
  • ஆனாலும் வெப்பகாலத்தில் உண்ண நன்மையைத் தரும்.

வெள்ளாடு மூத்திரம்.(வரிசை எண்.142.).



  • வெள்ளாடு மூத்திரம் வீக்கம் ,
  • பாண்டு ,
  • பற்பல வீக்கத்தின் எரிச்சல் ,
  • ரத்த கபம்,
  • துர்மாமிசம்,
  • மகோதரம் இவைகள் நீங்கும்.

வெள்ளாடு.(வரிசை எண்.141.).



  • வெள்ளாட்டிறைச்சியை உண்பவருக்கு உட்சுரங்களும் ,
  • வாத பயித்தியமும் ,
  • சயமும் போகும்.
  • சரீர புஷ்டியும் ,
  • வீரியமும் விளையும்.

வெண்புறா.(வரிசை எண்.140.).


  • பத்தியத்திற்கான வெண்புறாக் கறி வாதபித்தம் ,
  • ஜலமேகம் ,
  • விரணம் ,
  • வெண்குஷ்டம் ,
  • கரப்பான் ,
  • சொறி இவைகளை நீக்கும்.

விலாங்கு மீன்.(வரிசை எண்.139.).


  • விலாங்கு மீனை அதிகமாக தின்றால் கபாதிக்கம் ,
  • அரோசகம் ,
  • தாதுவிருத்தி ,
  • தவளைச்சொறி ,
  • விரணம் ,
  • கடுவன் இவை உண்டாகும்.

வான்கோழி.(வரிசை எண்.138.).


  • உருசியையுடைய வான்கோழிக்கு விந்துவும் ,
  • மகிழ்ச்சியும் ,
  • சிலேத்தும பந்தமும் ,
  • கரப்பானும் உண்டாகும்.

வாளை மீன்.(வரிசை எண்.137.).

  • வாதகுணமுள்ள வாளைமீன்,
  • தேகத்தைச் செழுமையாக்கித் தாது விருத்தியை உண்டாக்கும்.
  • அகாலத்தில் புசிக்கில் வாயுவாகும்.

வாத்து.(வரிசை எண்.136.).



  • வாத்துக் கறியையுண்ணில் ,கசிவு வறண்டு சிவந்தாறிய விரணம்,
  • கிரந்தி ,
  • கோழை ,
  • அருசி ,இவைகள் அதிகரிக்கும்.
  • சுக்கில தம்பனமாகும்.

வரிப்புறா.(வரிசை எண்.135.).


  • உருசியுள்ள வரிப்புறாக் கறியைத் தின்றால் வாயுவொடு கூடிய பித்தமும் ,
  • பலவித வீக்கங்களும் போகும்.

யானை மூத்திரம்.(வரிசை எண்.134.).


  • யானை மூத்திரத்தால் அதிதூலநோய்,
  • வீக்கம் ,
  • வாய்வு ,
  • கிருமிவிஷம்,
  • கருங்கரப்பான்,இவைகள் போகும்.
  • வன்மையும் ,
  • சரீரபுஷ்டியும் உண்டாகும்.

யானைப்பால்.(வரிசை எண்.133.).


  • தேனும்,பாலும் கலந்த ருசிபோன்ற யானைப்பாலைக் குடிப்பவர்களுக்கு வாதகோபம் நீங்கும்.
  • சுக்கிலவிருத்தியும் ,
  • மிகுந்த பலமும் உண்டாகும்.
  • பித்த சம்பந்த தேக அழகும் உண்டாகும்.

மெழுகு.(வரிசை எண்.132.).


  • தேன் மெழுகினால் பாரிசவாயு ,
  • வீக்கம் ,
  • கபநோய் ,
  • வாதகோபம் ,
  • சுக்கில நஷ்டம் ,
  • சிலேத்துமோஷ்டரோகம் ,
  • விஷம் ,
  • பைசாசம் ,
  • குஷ்டம் ,
  • ஆகந்துக விரணம்,
  • சத்தியோ விரணம் ,இவைகள் நீங்கும்.