திங்கள், 25 செப்டம்பர், 2017

முள்ளம்பன்றி (வரிசை எண்.131.).



  • முள்ளம்பன்றி இறைச்சி காட்டுப்பன்றி இறைச்சியை விட மேலானது.
  • அதிகரித்த வாயு ,
  • மூலம்,
  • சருமகீலிகம்,
  • குதப்பிரம்ஸ ரோகம்,
  • குடல்விருத்தி முதலியவை குணமாகும்.
  • தேகம் பலப்படும்.

முலைப்பால்.(வரிசை எண்.130.).


  • முலைப்பாலால் ஏழுவகைத் தோஷங்கள் ,
  • வெப்பம்,
  • சந்நிபாதம் ,
  • வாதபித்தம்,
  • நாவறட்சி ,
  • கபசுரங்கள்,
  • திரிதோஷம் ,
  • வாத கிரிச்சரம்,இவைகள் நீங்கும்.
  • மருந்துகளின் அனுபானத்திற்கும்,கலிக்கதிக்கும் ஆகும்.
  • தேவாமிர்தத்திற்கு ஒப்பானது.
  • உஷ்ண தேகமுடைவர் சாப்பிட தேகஉஷ்ணம் குறைத்து சாந்தபடும்.
  • குளிர்ந்த  தேகமுடைவர் சாப்பிட உஷ்ண தேகமாகும்.

முத்துச்சுண்ணம்.(வரிசை எண்.129.).


  • முத்துச்சுண்ணத்தினால் நீடித்த பேதி,
  • கபக்கட்டு,
  • மலக்கிருமி,
  • வயிற்று நோய்,
  • வாத அரோசகம்,ஆகியன நீங்கும்.

முத்துச் சிப்பி.(வரிசை எண்.128.).


  • முத்துச்சிப்பியினால் கபக்கோழை,
  • காசம்,
  • சயம்,
  • மேகப்பிடகம் ,
  • சிலேத்தும ஆதிக்கம் ,ஆகியன தீரும்.

முத்து.(வரிசை எண்.127.).

  • ஜீவரத்தினம் என்னும் முத்தினால் அஷ்திசுரம்,
  • வீக்கம் ,
  • அரோசகம் ,
  • மெலிவு,
  • விழிநோய்,
  • அக்கினி கீட விஷம்,
  • சுட்கசிலேத்துமம்,
  • குரல்வளையில் சத்துக்கின்ற கோழை,
  • தைரியமின்மை,
  • வீரிய நாசம் இவைகள் போகும்.

முதலை.(வரிசை எண்.126.).


  • முதலை இறைச்சியால் சிசுக்களுக்கு வரும் கக்கிரும்பலும்,
  • வாயுவும் ,கபமும் விலகும்.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

முசுறு முட்டை.(வரிசை எண்.125.).


  • முசுறு முட்டையினால் மஹாவாதம்,
  • மந்தம்,
  • இசிவு,
  • ஐவிதவலி,
  • நீர்க்கபநோய்,
  • சன்னி இவைகள் போகும்.

முயல்.(வரிசை எண்.124.).


  • முயல் கறியினால் விரைவாகிய நடைகள் உண்டாகும்.
  • பயித்தியம் ,
  • சயம்,
  • இருமல் ,
  • மகா சுவாசம்,
  • வாயு,
  • மலசிக்கல் தீரும்.

மான் இறைச்சி.(வரிசை எண்.123.).


  • மான் இறைச்சிக்குத் தொந்த நோய்,
  • ஈளை,
  • மாமிச பகந்தரம்,
  • கழல் வாயு,
  • வாதப் புடை,இவைகள் போகும்.
  • கண்புகைச்சலும்,பித்தமும் உண்டாகும்.  

மாடு.(வரிசை எண்.122.).

  • மாட்டு இறைச்சியினால் பலவியாதிகள் உண்டாகும்.
  • போக சக்தியை அதிகப்படுத்தும்.
  • அற்ப வாதரோகங்களை கண்டிக்கும்.
  • எளிதில் சீரணம் ஆகாது.
  • பித்தத்தையும்,கபத்தையும் அதிகப்படுத்தும்.
  • தேகத்தை நன்கு வளர்க்கும்.
  • குன்ம (வயிறு )நோயாளிகளுக்கு உதவாது,
  • தொண்டைக்கபமும்,நாளுக்குநாள் இளைக்க வைக்கின்ற சுரம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த இறைச்சியை உண்ண நன்மைதரும்.
  • அதிக உழைப்பாளிகளுக்கும்,சுறுசுறுப்புடையவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
  • இந்த உணவை பழக்கத்தில் கொள்ளத்  தேகத்தில் ஒருவித புலால் நாற்றத்தை உண்டாக்கும்.

மாடப்புறா.(வரிசை எண்.121.).


  • மாடப்புறாக் கறியால் தீபாக்கினியும்,
  • சுக்கிலமும் பெருகும்,
  • வாதப் பிரகோபம் நீங்கும்.
  • இந்த கறி பத்தியத்திற்க்கு ஆகும்.


மனைப்புறா.(வரிசை எண்.120.).

  • நாவிற்கு உருசியுள்ள மனைப்புறாக் கறி மருந்தை முறிப்பதும் தவிர
  •  கரப்பான்,
  • சருமச்சொறி ,
  • தாதுவிருத்தி இவைகளை உண்டாக்கும்.

மயில் நெய்.(வரிசை எண்.119.).


  • மயில் நெய்யை,மேற்றேய்ப்பதனால் நரம்புகளிற் காணுகின்ற இசிவு,
  • விரற்கணுக்களில் காணுகின்ற வீக்க நோய்,
  • கை கால்களில் காணுகின்ற பிடிப்பு முதலியவை நீங்கும்.
  • எத்தகைய கடின நோய்களாக இருப்பினும் குணமாவது திண்ணம். 

மயில் கறி.(வரிசை எண்.118.).

  • உஷ்ணமுள்ள மயில் கறி சாப்பிட்டால் கீல்களில் குத்தல்,
  • வாத சோணிதம்,
  • கப பித்தம்,
  • அதிகமுள்ள கபம் இவைகள் நீங்கும்.
  • தீபனத்தைத் தரும்.
  • தாதுவிருத்தியையும் உண்டாக்கும்.
  • இதன் மலத்தை நெருப்பனலில் போட்டு புகை உண்டாக்கப் பாம்பு முதலிய விஷ ஜெந்துக்கள் அணுகாது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மணிப்புறா.(வரிசை எண்.117.).

  • பத்தியத்திற்குதவியான மணிப்புறாக் கறியைத் தின்றால் 
  • வாதப் பிடிப்பு,
  • சயம்,
  • வயிற்று நோய்கள்,
  • வாதாதிக்கம்,இவைகள் போகும்.

மடையான்.(வரிசை எண்.116.).


  • மடையான் கறியை உண்டவருக்கு கடுவனும்,
  • நமைக்கிரந்தியும்,
  • வலுத்த சிலேத்துமமும்,
  • வாத தொந்தமும், உண்டாகும். 

மடவைமீன்.(வரிசை எண்.115.).

  • மடவைமீனால்  வாதப்பிணி,
  • அக்கினிமந்தம்,
  • மூலமுளை,
  • ஆந்திர பித்தவாதம்,
  • குத்தல்,
  • கடுவன்,இவைகளை தரும்.
  • மாமிச விருத்தியாகும்.

பொன்னம்பர்.(வரிசை எண்.114.).


  • மஞ்சள்நிறத்தை உடைய பொன்னம்பரால் தாது பலப்படும்.
  • ஐம்புலன்களின்  அறிவு விருத்தி ஆகும்.
  • நரம்புகள் வன்மை பெறும்.
  • பட்சவாதம் குணமாகும்.

பேராரால் மீன்.(வரிசை எண்.113.).

  • மருந்துக்கு சமமான பேராரால்  மீனுக்குத் தேகத்தில் உள்ள பலவித நோய்களும்,
  • பழய மலக்கட்டும்,நீங்கிச் சவுக்கியம் உண்டாகும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

பெருச்சாளி.(வரிசை எண்.112.).


  • பெருச்சாளியின் வயிற்றைக் கீறிக்குடலை நீக்கி மூழ்க நல்லெண்ணெய் விட்டுப் பதமுறக் காய்ச்சி வெண்குட்டத்திற்குத் தடவிவர ஒரு மண்டலத்தில் சுபாவ நிறமடையும்..

பூநாகம்,or மண்புழு,or நாங்கில் புழு.(வரிசை எண்.111.).


  • பூநாகம்,or மண்புழுவினால் மிகவும் துன்பத்தை விளைவிக்கிற தாகமும்,
  • ஏழுவித அசாத்திய சந்நிபாத சுரங்களும்,
  • ஊருஸ்தம்பம் என்கிற தொடை வாதமும்,
  • சிலேத்தும நோய்களும் நீங்கும்.