ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

புற்றான் சோறு.or புற்றாஞ் சோறு.(வரிசை எண்.110.).


  • புற்றான் சோற்றை உண்ண கிராணி,
  • அதிக நீர் போதல்,
  • தாகம் முதலியவை போகும்.
  • தாது பலப்படும்.
  • கருவங்கத்தை பற்பம் செய்யும்.

புழுகுச் சட்டம்.(வரிசை எண்.109.).



  • மணமுள்ள புழுகுச் சட்டத்தினால் மந்த வாதமும்,
  • பித்த கபமும்,
  • விஷமும் போகும்,
  • ஒளியும்,
  • தேஜஸும்,
  • நிறை ஆயுளும் ,
  • திருமகள் அருளும் உண்டாகும்.

பாலேடு.(வரிசை எண்.108.).


  • பாலில் உண்டாகும் ஆடையினால் பயித்திய நோயும்,
  • பித்த வாந்தியும் ,
  • மூர்ச்சையும் ,நீங்கும்.
  • மிகு பலமும் ,
  • சுக்கிலமும் ,
  • ஜடராக்கினியும் விருத்தியாகும்.
  • இது துர்பலம் உள்ளவர்களும் சாப்பிடலாம் குற்றம் இல்லை.

பன்றி இறைச்சி.(வரிசை எண்.107.).



  • பன்றி இறைச்சியால் கிராணி ,
  • கொடிய மூலநோய்,
  • வாய்வு,
  • ரத்தமூலம்,முதலியன குணமாகும்.
  • தாது விருத்தியும்,
  • தேக வன்மையும் உண்டாகும்.

பன்றி நெய்.(வரிசை எண்.106.)


  • பன்றி நெய்யால் நீர்ச்சுறுக்கு,
  • ரத்த மூலம்,
  • வாயுவினால் உண்டான தேக வலி,
  • அக்கி ,
  • தீப்பட்ட புண்கள்,
  • ஆறாத குழிரணங்கள்குணமாகும்.  

பள்ளையாட்டு இறைச்சி.(வரிசை எண்.105.)



  • இது சிறிய வகை ஆடு இனங்களில் ஒன்று .
  • பள்ளையாட்டு கறிக்கு அஜலம்,
  • மந்தாக்கினி,
  • நீங்காத அருசி,
  • திரிதோஷ மிஸ்ரம்,
  • கப தோஷம்,
  • வாதாதிக்கம் இவைகள் உண்டாகும். 

பவளம்.(வரிசை எண்.104.).


  • நற்பவள பற்பத்தினால் கபம் .
  • சுர தோஷம்,
  • தாகம்,
  • மேக அழலை,முதலியவை சாந்தப்படும்.
  • இருமல்,
  • அரோசகம்,
  • கீட விஷம்,
  • சுக்கில பலவீனம்,
  • விதாகம்,
  • நாவில் சுறசுறப்பு ஆகியன நீங்கும்.
  • சரீர காந்தியுண்டாகும்.

பலகறை.(வரிசை எண்.103.).


  • பலகறையால் அலஜம், 
  • தாகம்,
  • கிரகணி,
  • விஷசுரம்,
  • விழிநோய்,
  • வாததொந்தம்,
  • பலவிதக் குத்தல்,
  • சயம்,
  • கப வாதம்,இவைகள் போகும்.

சனி, 20 ஆகஸ்ட், 2016

பச்சை புறா.(வரிசை எண்.102.).


  • பச்சை புறாக்கறியை உண்டால் திரிதோஷம்.
  • பேதியும் போகும்.
  • தேக புஷ்டியும்,
  •  வீரிய விருத்தியும் உண்டாகும்.
  • இதன் ரத்தம் வாதத்தை உடனே குணமாக்கும்.

பசுவின் வெண்ணெய்.(வரிசை எண்.101.).


  • பசுவின் வெண்ணெய்க்கு கண்நோய்,
  •  கண்ணெரிச்சல் ,
  • பீளைசாரல்,
  • பிரமேகரோகம்,இவைகள் போகும்.
  •  தீபாக்கினி உண்டாம்.

பசுவின் மோர்.(வரிசை எண்.100.).


  • பசுவின் மோர்க்கு வீக்கம் ,
  • மகோதரம்,
  • வயிற்றுவலி,
  • பாண்டு ரோகம்,
  • பித்தகோபம்,
  • இடுமருந்தால் வரும் நோய்கள்,
  • பேதி,
  • திரி தோஷம் ,
  • அக்கினி மந்தம்,
  • வெப்பம்,
  • தாகம்  இவைகள் போகும்.  

பசுவின் மூத்திரம்.or கோசலம்.(வரிசை எண்.99.).





  • பசுவின் மூத்திரம்.or  கோசலத்தால் விஷ பாண்டு,
  • சோபை,
  • பற்பல வீக்கம்,
  • சகல விஷம்,
  • காமாலை,
  • கண் நோய்கள்,
  • தந்த ரோகம்,முதலியன போகும்.
குறிப்பு :
இதனை 3 மடிப்பு உள்ள சீலையில் வடிகட்டி வேளைக்கு 1அவுன்ஸ் வீதம் 2 வேளை கொடுத்து வரப் பெருவயிறு,காமாலை,நீர்ப்பாண்டு,
குன்மம்,மகோதரம் முதலியன தீரும். 

பசுவின் பால்.(வரிசை எண்.98.).


  • பசுவின் பாலைக் குழந்தைகள் முதல் விருத்தருக்கும்,
  • விரண ரோகிகளுக்கும்,
  • துர்ப்பலம் உடையவர்களுக்கும்,
  • இளைத்தவர்களுக்கும்,
  • மிதமிஞ்சிய  போகத்தால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் ,
  • நெடுநாள் சுரத்தில் கஷ்ட படுகிறவர்களுக்கும்,
  • மூளை சம்பந்தமான வியாத்திஸ்தர்களுக்கும்,
  • வாத ரோகிகளுக்கும்,
  • குடல் சம்பந்தமான வியாத்திஸ்தர்களுக்கும்,
  • அஜீர்ண பேதி உடையவர்களுக்கும்,
  • நீர்த்தாரை விரண முடையவர்களுக்கும், தினமும் காய்ச்சி ஆடை நீக்கி குடிப்பது நல்லது.
  • புராண சுரம்,
  • சூலை ,
  • பிரமேகம் ,
  • துர்ப்பலம் ,
  • அதி சுஷ்க ரோகம், ஆகியவர்களுக்கும் ஆகும்.

பசுவின் நெய் .(வரிசை எண்.97.).


  • பசுவின் நெய்யானது தாகம்.
  • உழலைப் பிணி,
  • அதிசுட்க ரோகம்,
  • வாந்தி,
  • பித்தாதிக்கம்,
  • வாத விஷமம்,
  • விரணப் பிரமேகம்.
  • வயிற்றிலேறிவு,
  • பித்த விக்கல்,
  • இருமல்,
  • வயிற்று வலி,
  • சினைப்பு,
  • குடல் நெளிதல்,
  • எலும்புருக்கி ,
  • பல வகை மூல ரோகம் ஆகியன நீங்கும்.

பசுவின் தயிர்.(வரிசை எண்.96.).


  • பசுவின் தயிரை உண்டால் பசிஉண்டாகும்.
  • இசிவு ,
  • சீரண ரோகம்,
  • தாகம்,
  • ஆயாசம் ,
  • காசம்,
  • சரீர எரிச்சல் இவைகள் நீங்கும்.
  • பகல் சாப்பாட்டின் இறுதியில் தயிர் சேர்ப்பது வழக்கம்.இது தேகத்தில் உள்ள வெப்பத்தை தணித்துத் தாகத்தை அடக்கும்.
  • பித்த சம்பந்தமான ரோகிகளும்,மூல ரோகிகளும்,உஷ்ண பேதி உடையவர்களும்,சீதபேதி உடையவர்களும் சாப்பிட நன்மை உண்டாகும்.
  • சிறிது புளிப்பு சுவை இருப்பின் ஜீரண சக்தியை விஷேசப்படுத்தும்.
  • இதை இரவு உணவில் சேர்க்க கூடாது.சேர்கின் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

பசுவின் சாணம்.(வரிசை எண்.95.)


  • பசுவின் சாணத்தை நீர் விட்டு கரைத்து கொதிப்பித்து தாளக்கூடிய சூட்டில் பற்று போல் பூச  கல் முதலியவைகளால் அடிபட்ட வீக்கம் போகும்.
  • ஒழுகுகின்ற உதிரம்,
  • கிருமி ரோகம்,
  • கப சுர  தாகம், இவைகள் நீங்கும்.
  • தேக சுத்தி உண்டாகும்.
  • தென்னையின் பாலுக்கு ஒப்பாகும்.

நீர்நாய் விதை.(வரிசை எண்.94.)


  • நீர்நாய் விதையினால் (நீர்நாய் சவ்வாது ) சன்னி,
  • நரம்புஇசிவு,
  • சுரம்,
  • மூர்ச்சை,
  • சூதக வலி,
  • சுவாச காசம்,
  • காக்கை வலி,
  • வாத நோய்,முதலியன குணமாகும்.

நீர்க்காக்கைக் கறி.(வரிசை எண்.93.).


  • புலால் நாற்றம் உள்ள நீர்க்காக்கைக் கறியால் பாண்டு,
  • வீக்கம்,
  • மகோதரம், இவைகள் போகும்.
  • கடுவனும்,
  • தினவும் உண்டாகும்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நாரைக் கறி.(வரிசை எண்.92.).

  • நாரைக் கறியைத் தின்றால் சீழ்கரப்பான்,
  • கிரந்தி,
  • கபமேகம்,
  • வாதகோபம், இவை உண்டாகும்.
  • அதிமூத்திரம் நோய் போகும்.

நத்தை.(வரிசை எண்.91.)


  • நத்தைக் கறிக்கு மூலமுளையும்,
  • மலாசயப் பிணிகளும், நீங்கும்.
  • இதை தினமும் சாப்பிட அஜீரணமும்,
  • சுக்கில பெருக்கமும் உண்டாகும்.

நண்டுக் குழிநீர் .(வரிசை எண்.90.),

  • வயல்களில் நண்டுகள் இருக்கும் படியான குழிகளில் நிறைந்துள்ள சலத்தினால் வமனம்,
  • நீங்காத விக்கல்,
  • தேக வெப்பம்,
  • எரிவு ஆகியன போகும்.

வயல் நண்டு.(வரிசை எண்.89.),




  • வயல் நண்டுக் கறியை உண்டால் வாத கடுப்பு,
  • தூங்க விடாத கபநோய்,
  • குடலிரைச்சல் இவைகள் போக்கும்.
  • பித்தம் பெருகும்.

தேன்கற்கண்டு.(வரிசை எண்.88.),


  • தேனில் உண்டாகும் கற்கண்டினால் கண்ணில் படருகின்ற துர்மாமிச படலம்.
  • உத்தராக்கினி,
  • சிலேத்தும தோஷம்,
  • வாதநோய்,
  • சுரரோகம் இவைகள் நீங்கும்.
  • இசை பாட்டுக்குரிய குரற் தொனி உண்டாகும்.

பழைய தேன்.(வரிசை எண்.87.),


  • புளிப்பு இனிப்பும் கலந்த சுவையுடைய பழைய தேனால் வாத நோய்களையும்,
  • வயிற்று எரிச்சலையும்,
  • வாத மூல ரோகத்தையும் உண்டாக்கும்.
  • மருந்துகளின் நல்ல குணம் கெடும்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

புதிய தேன்.(வரிசை எண்.86.),


  • புதிய தேனினால் நிறை ஆயுளும்,
  • சரீர வெப்பமும்,
  • தேஜசும், உண்டாகும்.
  • அதிகமகா உண்டால் அருசியும்,
  • நெஞ்சிற் கபமும் உண்டாக்கும். 

புற்றுத் தேன்.(வரிசை எண்.85.),




  • புற்றில் கட்டுகின்ற தேனுக்கு கபதோஷம்,
  • இருமல்,
  • ஈளை,
  • சர்த்தி,
  • நேத்திர ரோகம்,ஆகியன போகும்.

மனைத் தேன்.(வரிசை எண்.84.),


  • வீடுகளில் கட்டுகின்ற தேனுக்கு விரணம்,
  • சிலையோடுங் கரப்பான்,
  • நேத்திர விரணக் கிருமி,
  • புழு வெட்டு,
  • சிலேத்துமகோபம்,
  • காசம்,ஆகியன நீங்கும்.
  • ஜடராக்கினி உண்டாகும்.

மரப்பொந்துத் தேன்.(வரிசை எண்.83.),


  • மரப்பொந்துத் தேனால் ஜடராக்கினியும் உஷ்ணமும் உண்டாம்.
  • வமனம்,
  • மந்தாக்கினி,
  • பல வித விக்கல் ரோகம்,
  • அரோசகம்,
  • இருமல்,
  • சயம்,
  • அதிதூலரோகம், முதலியவை தீரும்.

மலைத் தேன்.(வரிசை எண்.82.),


  • மலைத் தேன் or குறிஞ்சி தேனால் சிலேத்துமகாசம்,
  • சுவாசம்,
  • விக்கல்,
  • கண் விரணம்,
  • சுரம்,
  • தேகக் கடுப்பு ,இவைகள் தீரும்.
  • தீபனமும்,
  • இனிய தொனியும் உண்டாகும்.
  • இது மருந்து அனுபானங்களுக்கும் ஆகும் .

கொம்புத் தேன்.(வரிசை எண்.81.),


  • மாமரம் முதலிய மரக்கொம்புகளில்  கட்டுகின்ற  தேன் திரிதோஷத்தையும்,
  • உள்மாந்தையையும்,
  • அரோசகத்தையும்,நீக்கும்.

தேன்.(வரிசை எண்.80.),

  • நல்ல தேனால் பித்தம்,
  • வாந்தி,
  • கப சம்பந்தமான நோய்கள்,
  • வாயு,
  • ரத்தத்தில் உள்ள குற்றங்கள் முதலியன நீங்கும்.

தூக்கணங்குருவி.(வரிசை எண்.79.),



  • தூக்கணங்குருவிக் கறி பத்தியத்திற்கு ஆகும்.
  • கபம்,
  • அரோசகம்,
  • மலக்கட்டு, இவைகள் நீங்கும்.
  • பசியையும்,
  • வனப்பையும் உண்டாக்கும்.

திருக்கை மீன்.(வரிசை எண்.78.),



  • திருக்கை மீனைத் தின்பவருக்கு வாத தாதுவும்,
  • சுக்கில தாதுவும் அதிகரிக்கும்,
  • பயித்தியமும்,
  • வீக்கமும் நீங்கும்.

சேல்கெண்டை.(வரிசை எண்.77.),


  • அதிக உருசியுள்ள சேல்கெண்டை மீன் குடல்வாதக்குத்தல்,
  • வாதப் பிரமேகம் ,
  • விரணம்,
  • கிரந்தி,இவைகளை உண்டாக்கும்.

செம்மறியாட்டுப் பால்.(வரிசை எண்.76.),


  • வாதரூபமான செம்மறியாட்டுப் பால் பித்த சிலேத்தும தொந்தம்,
  • வயிற்றுப்பிசம்,
  • மேற்சுவாசம் இவைகள் உண்டாகும்,
  • இதை தினசரி உபயோகித்தால் வாத சம்பந்தமான பல பிணிகள் நெருங்கும்,எனவே பருகாமல் இருத்தலே மிக சிறந்தது.

செம்மறியாட்டுத்தயிர்.(வரிசை எண்.75.),


  • மதுரமுள்ள செம்மறியாட்டுத்தயிரை உண்டால் கரப்பான்,
  • புடை ,
  • மூலக்கடுப்பு,
  • ரத்த மூலம்,
  • வாத ரோகம், முதலியவை கூடும்.
  • சரீரத்திற்கு துன்பம் உண்டாகும்.

செம்மறியாட்டிறைச்சி.(வரிசை எண்.74.),


  • செம்மறியாட்டிறைச்சியை உண்டால் செங்கரப்பான்,
  • முன்பில்லாத பலவித ரோகங்களும்,
  • சகல துன்பம் உண்டாகும்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சுறா மீன்.(வரிசை எண்.73.),


  • நல்ல சுறா மீன் கறிக்கு வாத கப தொந்தம்.
  • கிருமி நோய்,
  • குடல் விருத்தி இவைகள் நீங்கும்.
  • சகல பிணிகளையும் சாந்தப் படுத்தும்.